திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்...!

கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா: யாகசாலை பூஜையுடன் தொடக்கம்...!
Published on

தூத்துக்குடி,

இந்து மதக்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா இன்று அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

சஷ்டி மண்டபத்தில் காலை 7.30 மணிக்கு ஜெயந்திநாதர் - வள்ளி, தேவானை அம்மாளுக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர், சுவாமி, அம்மாளுக்கு 16 வகை மங்கல பொருட்களால் அபிஷேகமும் செய்யப்பட்டது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 18-ந்தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி திருச்செந்தூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com