108 சங்காபிஷேகம்

ஆலங்குடி குருபரிகார கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது
108 சங்காபிஷேகம்
Published on

நீடாமங்கலம்;

நவக்கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி குருபரிகார கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அதிகாலை கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், குருபகவான் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. .இரவு ஆபத்சகாயேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதைப்போல நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில், கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் கார்த்திகை கடைசி சோமவார வழிபாடு நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com