சொந்த மண்ணில் மரண அடி...ஒருநாள், டி20 தொடர் இரண்டையும் இழந்த இலங்கை

இங்கிலாந்து அணி, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது.
சொந்த மண்ணில் மரண அடி...ஒருநாள், டி20 தொடர் இரண்டையும் இழந்த இலங்கை
Published on

சென்னை,

இங்கிலாந்து அணி இலங்கையில் நடந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் வெற்றி பெற்றுள்ளது. 2026 டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக, ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணி, இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்துள்ளது.

முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இங்கிலாந்து அணி, டி20 தொடரிலும் மரண அடி கொடுத்துள்ளது..

2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் 4 நாட்களே மீதமுள்ள நிலையில், சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரை இழந்துள்ளது இலங்கை அணி.

Also Read
இந்தியாவுக்கு எதிராக விளையாட மறுப்பு - பாகிஸ்தானை தடை செய்ய ஐ.சி.சி ஆலோசனை?
சொந்த மண்ணில் மரண அடி...ஒருநாள், டி20 தொடர் இரண்டையும் இழந்த இலங்கை

இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, நேற்று இரண்டாவது போட்டியிலும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என இங்கிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை நடக்கவிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com