பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: நாங்கள் தயாராக இருக்கிறோம்: திலக் வர்மா

இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி: நாங்கள் தயாராக இருக்கிறோம்:  திலக் வர்மா
Published on


சென்னை,

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில், வரும் 15-ம் தேதி ரசிகர்கள் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி கொழும்புவில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி தொடர்பாக பேசிய இந்திய வீரர் திலக் வர்மா கூறியதாவது,

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது என்று ஒருநாளைக்கு முன்னர்தான் ஒருநாளைக்கு முன்னர்தான் தெரியவந்துள்ளது. நாங்கள் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறோம்.

நாங்கள் அனைத்து அணிகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறோம். பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களை கவனித்துக் கொண்டிருக்கிறோம். வீரர்களும், அணி ஸ்டாஃப்களும் தயார். தற்போது நாங்கள் போட்டிக்கான பகுதியில் இருக்கிறோம். திட்டங்கள் தொடங்கப்படும். என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com