டெல்லியில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது
டெல்லியில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி
Published on

பாரீஸ்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற 29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஒரு வார காலமாக நடந்தது. இதில் இந்தியாவில் இருந்து 15 வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கம் வென்றது. மற்றவர்கள் காலிறுதியை தாண்டவில்லை.

இதன் நிறைவு விழாவில், 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டெல்லியில் நடத்தப்படும் என உலக பேட்மிண்டன் சம்மேளனம் அறிவித்துள்ளது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது இது 2-வது முறையாகும். கடைசியாக 2009-ம் ஆண்டில் ஐதராபாத்தில் நடந்தது. பாரீஸ் வெளிப்படுத்திய அதே சிறப்பு, பிரமாண்டம், தரத்துடன் சாம்பியன்ஷிப்பை முன்னெடுத்து செல்வோம் என உறுதி அளிக்கிறோம். டெல்லிக்கு பேட்மிண்டன் குடும்பத்தினரை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என இந்திய பேட்மிண்டன் சம்மேளன பொதுச் செயலாளர் சஞ்சய் மிஸ்ரா குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com