

சோழவந்தான்,
தமிழ் மாதம் ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அன்றைய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். சோழவந்தான், திருவேடகம், அணைப்பட்டி, மதுரை பேச்சியம்மன் படித்துறை உள்ளிட்ட வைகை ஆற்றுப்பகுதியில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பண பூஜைகள் செய்தனர்.