துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ராதிகா சரத்குமார்!


துப்பறியும் போலீஸ் அதிகாரியாக ராதிகா சரத்குமார்!
x
தினத்தந்தி 25 Sep 2017 8:30 AM GMT (Updated: 25 Sep 2017 8:30 AM GMT)

விக்ரம் கதாநாயகனாக நடிக்க, கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் ‘துருவ நட்சத்திரம்,’ துப்பறியும் கதையம்சம் கொண்ட படம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது.

 முதல் கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்றது. அடுத்து இப்போது, அந்த படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெறுகிறது.

இந்த படத்தில், ராதிகா சரத்குமார் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்புக்காக அவர் 2 முறை பல்கேரியாவுக்கு போய் வந்தார். துருக்கியில் நடைபெற்ற படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டார். ராதிகா சரத் குமாருடன் இன்னொரு துப்பறியும் அதிகாரியாக சிம்ரன் நடிக் கிறார். 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து இருக்கிறது!

Next Story