பேராசிரியை முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியர் கைது


பேராசிரியை முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட ஓட்டல் ஊழியர் கைது
x
தினத்தந்தி 24 July 2017 9:34 PM GMT (Updated: 24 July 2017 9:34 PM GMT)

மும்பை சர்ச்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் 38 வயது பேராசிரியை ஒருவர் சர்ச்கேட் ரெயில் நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்.

மும்பை,

மும்பை சர்ச்கேட் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்து வரும் 38 வயது பேராசிரியை ஒருவர் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் சர்ச்கேட் ரெயில் நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பேராசிரியை நோக்கி தனது பேண்டை கழற்றி ஆபாச செய்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பேராசிரியை அந்த நபர் மீது மெரின்டிரைவ் போலீசில் புகார் கொடுத்தார். உடனே போலீசார் அங்கு சென்று குறிப்பிட்ட நபரை பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் ராய்காட்டை சேர்ந்த மனோஜ் மோகிதே (வயது39) என்பதும், சர்ச்சேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.


Next Story