பஞ்சாப் சட்டசபை தேர்தல்:வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நவ்ஜோத் சிங் சித்து


பஞ்சாப் சட்டசபை தேர்தல்:வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நவ்ஜோத் சிங் சித்து
x
தினத்தந்தி 18 Jan 2017 10:44 AM GMT (Updated: 18 Jan 2017 10:44 AM GMT)

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அமீர்தசரஸ்,

பாரதிய ஜனதா கட்சியில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து, சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டபை தேர்தலில் வெற்றி என்பது பஞ்சாப்பிற்கு உரியதாக இருக்கட்டும். இங்குள்ள ஒவ்வொரு வாக்களரும் பஞ்சாப் மாநில நலத்திற்காக வாக்களிக்க் வேண்டும். தற்போது உள்ள அமைப்பில் உள்ளே நுழைந்தது சரி செய்ய வேண்டியது என் கடமையாக கருதுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 4ஆம்  ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக – அகாலிதளம் கூட்டணி, ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story