கணவரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய மனைவி: சிசிடிவி மூலம் அம்பலம்


கணவரின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய மனைவி: சிசிடிவி மூலம் அம்பலம்
x
தினத்தந்தி 7 May 2024 10:34 AM GMT (Updated: 7 May 2024 10:56 AM GMT)

தனிக்குடித்தனம் வைத்த சில நாட்களிலேயே மெஹரின் சுயரூபம் கணவருக்கு தெரியவந்தது.

லக்னோ,

உத்திரப்பிரதேச மாநிலம் பிஜ்ஜனூரில் வசித்து வருபவர் மன்னன். இவர், சபியாபாத் கிராமத்தை சேர்ந்த மெஹர் ஜஹான் என்பவரை கடந்த ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதன்பின்னர், தன் மனைவி கேட்டுக்கொண்டதற்கிணங்க தனது குடும்பத்தை விட்டு தனிகுடித்தனம் சென்றார். திருமணமான ஒரு ஆண் தனது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ போவதாக ஆயிரம் கனவுகளுடன் இருந்து வந்தநிலையில், தனிகுடித்தனம் வைத்த சில நாட்களிலேயே மன்னனின் மனைவி மெஹரின் சுயரூபம் தெரியவந்தது. மனைவி மதுப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மன்னன் அவரது மனைவியை பலமுறை கண்டித்தும் அப்பழக்கத்தை விடவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மெஹர் அவரது கணவரை உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியும், கை கால்களை கட்டி போதை பொருட்களை அவருக்கு தொடர்ந்து வழங்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவரது அந்தரங்க உறுப்பில் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று மன்னன் கூறியபோது, மன்னனின் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளாராம். இதனால் செய்வதறியாது மனக்கலக்கத்தில் இருந்த மன்னன், தான் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் ஏப்ரல் 29-ம் தேதி வழங்கி புகார் அளித்துள்ளார்.மேலும் தான் துன்புறுத்தப்பட்டதையும் தெரிவித்துள்ளார்.மனைவியிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போலீசாருக்கு கணவரை மெஹர் துன்புறுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட பெண்ணுக்கு எதிராக பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது, பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story