எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும் மாஃபா பாண்டியராஜன்


எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும் மாஃபா பாண்டியராஜன்
x
தினத்தந்தி 19 Feb 2017 9:03 AM GMT (Updated: 19 Feb 2017 9:02 AM GMT)

எம்.எல்.ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும் போது தான் பிரச்சனையின் தீவிரம் புரியும் என்று பன்னீர்செல்வம் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நேற்றைய பேரவை நிகழ்வுகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் -ஆளுநரிடம் விளக்கினார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்ய ஆளுநரிடம் வலியுறுத்தினோம். எம்எல்ஏக்கள் 5 நாட்கள் தொகுதிக்கு சென்று வந்த பின் ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஆளுநரிடம் கோரிக்கை -வைத்தோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் நாங்கள் வெற்றி பெறுவோம். எம்எல்ஏக்கள் மக்களை சந்திக்க செல்லும்போது தான் பிரச்சினையின் தீவிரம் புரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story