நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு


நாகை மீனவர்கள் 8 பேர்  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2017 6:58 AM GMT (Updated: 24 Jun 2017 6:58 AM GMT)

நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு


நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருககு சொந்தமான விசைப் படகில்   8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் விசைப்படகில் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இது பற்றி இன்று காலை தெரியவந்ததும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலோர காவல் படை போலீசாரை சந்தித்து சிறை பிடிக்கப்பட்ட 8 பேரையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Next Story