பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு


பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 25 Jun 2017 5:16 AM GMT (Updated: 25 Jun 2017 5:30 AM GMT)

பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் தீ பிடித்து எரிந்ததில் 123 பேர் உயிரிழந்தனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்,

 பாகிஸ்தானின் பகாவல்பூரில் ஆயில் டேங்கர் ஒன்று கவிழ்ந்து தீ பிடித்து எரிந்தது. அகமத் பூர் ஷார்கியா பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி கவிழ்ந்து, வெடித்து தீ பிடித்து எரிந்தது என அந்நாட்டு மீடியா டான் செய்தி வெளியிட்டு உள்ளது.

டேங்கர் லாரி வெடித்து அப்பகுதியில் தீ பரவியது தொடர்பாக தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாகவும், மீட்பு பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் 123 பேர் பலியாகினர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 75-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். டேங்கர் லாரி கவிழ்ந்ததும் ஆயிலை சேகரிக்க மக்கள் கூடிஉள்ளனர். அப்போதுதான் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டு உள்ளது என தெரியவந்து உள்ளது. தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த வாகனங்கள் அனைத்து எரிந்து நாசமாகியது.

காயம் அடைந்தவர்களில் பெரும்பாலோனர் நிலை கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Next Story