5 வயது சிறுமியை திருமணம் செய்த 22 வயது வாலிபர் கைது


5 வயது சிறுமியை திருமணம் செய்த  22 வயது வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 July 2017 7:26 AM GMT (Updated: 26 July 2017 7:26 AM GMT)

பாகிஸ்தானில் 5 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்ட 22 வயது வாலிபரை போலீசார் செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் தகான் பகுதியில் உள்ள ராமன் ஷர் கிராமத்தில் 5 வயது சிறுமிக்கும், 22 வயது வாலிபருக்கும்  திருமணம் நடைபெறவிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் திருமணம் நடைபெறும் இடத்திற்கு தாமதமாக சென்றுள்ளதால், அங்கு திருமணம்  முடிந்துள்ளது.

இருப்பினும் 5 வயது சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக மணமகன் ஹபிபுல்லா , திருமணத்தை பதிவு செய்த பதிவாளர் மவுலவி  கியாபதுல்லா பூட்டோ (40) மற்றும் மணமகனின் தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 18 வயது குறைந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இதையும் மீறி மணமகன் 5 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளதால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story