இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ ஜனவரி 14ல் இந்தியா பயணம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ இந்தியாவில் ஜனவரி 14 முதல் 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார்.
ஜெருசலேம்,
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே 1992ம் ஆண்டு தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் 2003ம் ஆண்டு, இஸ்ரேல் பிரதமராக இருந்த ஏரியல் ஷரோன் முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.
இந்தியா மற்றும் இஸ்ரேல் நாடுகளிடையே 1992ம் ஆண்டு தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் 2003ம் ஆண்டு, இஸ்ரேல் பிரதமராக இருந்த ஏரியல் ஷரோன் முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டார்.
இந்நிலையில், இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாஹூ அடுத்த ஆண்டு ஜனவரி 14ல் இந்தியாவிற்கு 4 நாள் சுற்று பயணம் மேற்கொள்கிறார். அவரை குஜராத்தின் அகமதாபாத் நகரில் பிரதமர் மோடி வரவேற்கிறார்.
குஜராத்தில் இதற்கு முன் சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபே ஆகியோரை மோடி வரவேற்றுள்ளார்.
ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் புதுடெல்லியில் நடைபெறும் அரசு சார்ந்த சந்திப்புகளில் பங்கேற்கிறார்.
இந்தியாவில் அவரது நிகழ்ச்சி பற்றிய விரிவான பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனினும், உயர்மட்ட தலைவர்களை அவர் சந்தித்து பேசுவார் என தகவல் தெரிவிக்கின்றது.
Related Tags :
Next Story