தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 22 பேர் காயம்


தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல்: 3 பேர் பலி, 22 பேர் காயம்
x
தினத்தந்தி 22 Jan 2018 6:31 AM GMT (Updated: 22 Jan 2018 6:31 AM GMT)

தாய்லாந்து நாட்டில் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர். #Thailand | #bombblast

யலா,

தாய்லாந்து நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள யலா மகாணம் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் நிறைந்ததாக உள்ளது. தாய்லாந்து ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல், இப்பகுதியில் ஏற்படும் வன்முறைகளால் 7 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவி பொதுமக்கள் ஆவர். இந்த நிலையில், அங்குள்ள மார்க்கெட் பகுதியை குறிவைத்து  மோட்டார் சைக்கிள் வெடி குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் இடத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். 22 பேர் காயம் அடைந்தனர்.  யலா மாகாணத்தில், கடந்த 2 ஆண்டுகளில் நிகழ்த்தப்படும் மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். #Thailand | #bombblast

Next Story