ஜோலார்பேட்டை - காட்பாடி இடையே நாளை மின்சார ரெயில் ரத்து

காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்.06417) நாளை (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது

Update: 2024-05-07 15:49 GMT

சென்னை,

பயணிகளின் பாதுகாப்பிற்காகவும், ரெயிலை பாதுகாப்பாக இயக்கவும் அரக்கோணம் - ஜோலார்பேட்டை வழித்தடத்தில் உள்ள பச்சகுப்பம் பணிமனையில் நாளை (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி காலை 10.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயல்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு ஜோலார்பேட்டை செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (வண்டி எண்.06417) நாளை (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, ஜோலார்பேட்டையிலிருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு காட்பாடி செல்லும் சிறப்பு மின்சார ரெயில் (06418) இன்று (புதன்கிழமை) மற்றும் 10-ந்தேதி ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்