15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 30 ஆண்டு சிறை

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; வாலிபருக்கு 30 ஆண்டு சிறை
Published on

உடுப்பி-

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

பள்ளி மாணவி

உடுப்பி மாவட்டம் பைந்தூர் அருகே எரஞ்சாலு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (வயது24). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். சிறுமி பள்ளிக்கு செல்லும்போது கிரிஷ் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அந்த வழியாக வந்த கிரிஷ் மோட்டார் சைக்கிளில் சிறுமியை அழைத்து சென்றாள். பின்னர் அப்பகுதியில் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் வைத்து கிரிஷ், ஆசைவார்த்தைகள் கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதுகுறித்து யாரிடமும்  கூறக்கூடாது என சிறுமியை அவர் மிரட்டி உள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.

30 ஆண்டு சிறை

இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குந்தாப்புரா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு கிரிசை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. போலீசார் கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி சீனிவாச சுவர்ணா தீர்ப்பு கூறினார்.

அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிரிசிற்கு 30 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com