

திருச்சி
திருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 42 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 54 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினர். திருச்சியில் கொரோனா தொற்றுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரை 464 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.