புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை மறைமுகமாக நடந்து வருகிறது. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புகையிலை பொருட்களை விற்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் நேற்று சுப்பையா சாலையில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளரான சோனாம்பாளையத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பவரை கைது செய்தனர்.

கைது

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், மூர்த்திக்கு புகையிலை பொருட்கள் சப்ளை செய்தது வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த அகமது அலி (70), மொத்த விற்பனையாளர் ஜெகராம் (50) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.53 ஆயிரம் மதிப்புள்ள 120 கிலோ எடை கொண்ட புகையிலை பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com