தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 31 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே 496 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் 65 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். மாவட்டத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 461 ஆகும். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 231 பேர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,774 ஆகும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com