மது விற்ற 4 பேர் கைது

மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கரூர்
கரூர்
Published on

குளித்தலை

குளித்தலை பெரியபாலம், உள்மருதூர், ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக குளித்தலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற போலீசார் அப்பகுதிகளில் மது விற்ற மாணிக்கம் (வயது 53), தங்கராசு (78), பரமேஸ்வரி (61) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 14 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மது விற்ற தளவாபாளையம் பஜனை மடத்தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன் (40) என்பவரை வேலாயுதம் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் கைது செய்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com