மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.
மும்பை விமான நிலையத்தில் 2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது; துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள்
Published on

மும்பை, 

மும்பை விமான நிலையத்தில் ரூ.2 கிலோ தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் துபாய்க்கு சுற்றுலா சென்று திரும்பியவர்கள் ஆவர்.

ரூ.1 கோடி தங்கம்

துபாயில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு சம்பவத்தன்று விமானம் ஒன்று வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு குடும்பத்தினரிடம் இருந்து 2 கிலோ எடையுள்ள தங்க கட்டி மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இதையடுத்து சுங்க அதிகாரிகள் தங்க கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

துபாய்க்கு சுற்றுலா

விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் நவிமும்பை, வாஷி பகுதியை சேர்ந்த ஈஸ்வர் ரமேஷ், அவரது உறவினர்கள் சவான் வேல்ஜி, ஷியாம் ரமேஷ், குணால் பாலாசாகேப் என்பது தெரியவந்தது. 4 பேரும் துபாய்க்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வந்தவர்கள் என கூறப்படுகிறது. தங்கத்துடன் கைது செய்யப்பட்ட 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். கோர்ட்டு அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com