நகை வியாபாரி அலுவலக ஊழியரிடம் ரூ.40 லட்சம் தங்கம் கொள்ளை

நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் இருந்து ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.
நகை வியாபாரி அலுவலக ஊழியரிடம் ரூ.40 லட்சம் தங்கம் கொள்ளை
Published on

மும்பை, 

தென்மும்பை புலேஷ்வர் பகுதியில் நகை வியாபாரி ஒருவரின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர் சம்பவத்தன்று இரவு 2 தங்க பிஸ்கட்டுகளை கல்யாணில் உள்ள நகை வியாபாரியின் வீட்டுக்கு கொண்டு சென்றார். இந்தநிலையில் அந்த ஊழியரை புலேஷ்வரில் இருந்து 4 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்தனர். அவர்கள் கல்பாதேவி பகுதியில் வைத்து நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் திடீரென தகராறு செய்தனர். அப்போது அவர்கள் ஊழியரிடம் இருந்த பையை பறித்துவிட்டு தப்பி சென்றனர். அந்த பையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 2 தங்க பிஸ்கட், ஆபரணங்கள் இருந்து உள்ளன.

இதுகுறித்து பைதோனி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை வியாபாரியின் அலுவலக ஊழியரிடம் ரூ.40 லட்சம் தங்கத்தை கொள்ளை அடித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com