சூதாடிய 9 பேர் கைது

பாளையங்கோட்டையில் பணம் வைத்து சூதாடிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
சூதாடிய 9 பேர் கைது
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாளையங்கோட்டை பொட்டல் சாஸ்தா கோவில் அருகில் பணம் வைத்து சூதாடிய பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 45), பாலச்சந்திரன் (41), துரை (52), நம்பிராஜன் (40), ரமேஷ் (28), இளங்கோ (33), அருணாசலம் (32), செல்வின் (32), நயினார் (30) ஆகிய 9 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.6 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com