ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே
ரூ.3 கோடி சம்பளம் கேட்கும் பூஜா ஹெக்டே.
நடிகைகள் படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்துகிறார்கள். நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடியை தாண்டி உள்ளது. இந்தி நடிகை தீபிகா படுகோனே கதாநாயகனுக்கு இணையான சம்பளம் கேட்கிறார்.
நடிகை பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி உள்ளார். இவர் இதுவரை ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்கவும் பூஜா ஹெக்டேவை அணுகி உள்ளனர். அந்த படத்துக்கும் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார்.
பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பிரபாசின் ராதே ஷியாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன.
நடிகை பூஜா ஹெக்டேவும் சம்பளத்தை ரூ.3 கோடியாக உயர்த்தி உள்ளார். இவர் இதுவரை ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வரை சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள படத்தில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இதுபோல் தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் சீனிவாஸ் டைரக்டு செய்யும் படத்தில் நடிக்கவும் பூஜா ஹெக்டேவை அணுகி உள்ளனர். அந்த படத்துக்கும் ரூ.3 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறார்.
பூஜா ஹெக்டே ஏற்கனவே சிரஞ்சீவியின் ஆச்சார்யா, பிரபாசின் ராதே ஷியாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இரண்டு இந்தி படங்களும் கைவசம் உள்ளன.
Related Tags :
Next Story