மொழி தெரியாதவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை எதிர்க்கும் நடிகை


மொழி தெரியாதவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதை எதிர்க்கும் நடிகை
x

தமிழில் 'ஓய்' படம் மூலம் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா, நித்தம் ஒரு வானம் படத்தில் சில காட்சிகளில் வந்தார். ஆயிரம் ஜென்மங்கள் படத்திலும் நடித்துள்ளார். தெலுங்கு நடிகையான இவர் மொழி தெரியாத நடிகைகளுக்கு படவாய்ப்பு கொடுப்பதை எதிர்த்துள்ளார்.

இதுகுறித்து ஈஷா ரெப்பா அளித்துள்ள பேட்டியில், "நான் தமிழ், மலையாள படங்களில் நடித்தபோது அங்குள்ளவர்கள் தெலுங்கு பட உலகைபற்றி அதிகமாக பேசுவதை கேட்டு இருக்கிறேன். ஆனால் தெலுங்கு பட உலகில் தெலுங்கு மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிகம் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.

மற்ற மாநில கதாநாயகிகளை வைத்துத்தான் படங்கள் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் யாரும் கேட்பது இல்லை. அப்படி இருக்கும்போது வேற்றுமொழி நடிகர்-நடிகைகளுக்கு அதிக வாய்ப்புகள் ஏன் கொடுக்கிறார்கள் என்று புரியவில்லை. இங்கு மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகிலும் மொழி தெரியாதவர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கிறார்கள். இந்த நிலைமை மாறவேண்டும்'' என்றார்.

ஈஷா ரெப்பா தற்போது தெலுங்கில் சுதிர் பாபு ஜோடியாக 'மாயா மச்சின்திரா' படத்திலும் ஜெ.டி. சக்கரவர்த்தி ஜோடியாக 'தயா' படத்திலும் நடிக்கிறார்.


Next Story