மாணவர் மீது சாதி வெறி தாக்குதல்: ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை மீது நடந்த சாதி வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு நடிகர்-நடிகைகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், 'தம்பி சின்னத்துரை விரைவில் குணமடைய வேண்டுகிறேன். சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்', என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் உள்பட திரை பிரபலங்கள் பலரும் நெல்லையில் மாணவர் மீது நடந்த சாதி வெறி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





