ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை


ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 16 May 2021 7:22 PM GMT (Updated: 16 May 2021 7:22 PM GMT)

திசையன்விளையில் ஊரடங்கை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

திசையன்விளை, மே:
கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த வருகிற 24-ந் தேதி  வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி திசையன்விளை பஜாரில் தேவை இல்லாமல் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களை திசையன்விளை நடமாடும் மருத்துவ ஊர்தி தொழில்நுட்ப ஆய்வாளர் கல்யாணசுந்தரி மற்றும் குழுவினர் நேற்று பழைய பஸ் நிலையம் அருகில் மடக்கி பிடித்து கொரோனா பரிசோதனை செய்தனர்.
பின்பு அவர்களது முகவரியை பெற்று கொண்டு பரிசோதனை முடிவுகளை அனுப்பி வைப்பதாக தெரிவித்தனர். சிலர் சோதனைக்கு பயந்து ஓட்டம் பிடித்தனர்.

Next Story