1,042 பேருக்கு கொரோனா பரிசோதனை
1,042 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் 442 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 600 பேருக்கும் என மொத்தம் 1,042 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வரவேண்டியது உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 42 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 10 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 52 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 5,100-ம், கோவேக்சின் கொரோனா தடுப்பூசி 440-ம் கையிருப்பில் உள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று 365 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும், 20 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 385 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பகுதி
Related Tags :
Next Story