சிப்காட்டில் விதிமுறைகளை மீறியதாக 140 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 18 Jun 2021 10:39 PM IST (Updated: 18 Jun 2021 10:39 PM IST)
சிப்காட்டில் விதிமுறைகளை மீறியதாக 140 பேர் மீது வழக்கு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையிலான போலீசார் சிப்காட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீக்கராஜபுரம் சோதனை சாவடி, பள்ளேரி மற்றும் சிப்காட் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட் அணியாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறியதாக 140 வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் முககவசம் அணியாமல் வந்த 20 பேருக்கு தலா ரூ.200 அபராதமும் விதிக்கப்பட்டது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





