2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 18 Jun 2021 10:46 PM IST (Updated: 18 Jun 2021 10:46 PM IST)
2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
திருமயம், ஜூன்.19-
திருமயம் அருகே பகவான்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு (வயது 36). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஒருமகன் உள்ளான். இந்நிலையில் முத்தழகு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியதுடன், தனக்கு அவரை 2-ம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கணவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து முத்தழகு அந்த பெண்ணுடன் தலைமறைவானார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுவை கைது செய்தனர்.
திருமயம் அருகே பகவான்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு (வயது 36). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஒருமகன் உள்ளான். இந்நிலையில் முத்தழகு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியதுடன், தனக்கு அவரை 2-ம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கணவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து முத்தழகு அந்த பெண்ணுடன் தலைமறைவானார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





