2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது


2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Jun 2021 10:46 PM IST (Updated: 18 Jun 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

2-வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது

திருமயம், ஜூன்.19-
திருமயம் அருகே பகவான்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு (வயது 36). இவரது மனைவி சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது. ஒருமகன் உள்ளான். இந்நிலையில் முத்தழகு ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகியதுடன், தனக்கு அவரை 2-ம் தாரமாக திருமணம் செய்து வைக்குமாறு மனைவியிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுகன்யா கணவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து முத்தழகு அந்த பெண்ணுடன் தலைமறைவானார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்தழகுவை கைது செய்தனர்.
1 More update

Next Story