தேனியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

x
தினத்தந்தி 20 Jun 2021 9:41 PM IST (Updated: 20 Jun 2021 9:41 PM IST)
தேனியில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 706 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தவர்களில் 244 பேர் நேற்று குணமாகினர். கொரோனா பாதிப்புடன் தற்போது 1,154 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் தேனியை சேர்ந்த 64 வயது முதியவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 474 ஆக உயர்ந்தது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





