சாராயம் விற்ற வாலிபர் கைது

மணல்மேட்டில் சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்
சாராயம் விற்ற வாலிபர் கைது
Published on

மணல்மேடு:

மணல்மேடு மீன்தொட்டி தெருவில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மணல்மேடு மீன்தொட்டி தெருவை சேர்ந்த ஜெயபால் மகன் மாதவன் (வயது 28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சாராயம் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com