கடமடை பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது

கடமடை பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
கடமடை பகுதியில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கிய பெண் கைது
Published on

தர்மபுரி:

தர்மபுரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையில் பாலக்கோடு அருகே உள்ள கடமடை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராணி (வயது 35) என்பவரது வீட்டின் அருகே 1 டன் எடை கொண்ட 20 ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com