காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை

நெகமத்தில் காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நெகமம்

நெகமத்தை அடுத்த வடசித்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜோதிராஜ் (வயது 30). இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆர்த்தி அடிக்கடி செல்போனில் பேசிவந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த ஆர்த்தி, சம்பவத்தன்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆர்த்திக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com