49 பேருக்கு கொரோனா


49 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 21 Jun 2021 2:38 PM GMT (Updated: 21 Jun 2021 2:38 PM GMT)

49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 49 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 358 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 93 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்து 451 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 581 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 326 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்தநிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியானதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது

Next Story