கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2021 7:57 PM GMT (Updated: 21 Jun 2021 7:57 PM GMT)

நின்று கொண்டு இருந்த கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் தம்பதி உயிர் தப்பினர்.

தாயில்பட்டி, 
சிவகாசி நாராயணாபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் தனது மனைவி சுகன்யாவுடன் தாயில்பட்டி வழியாக சாத்தூருக்கு காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சுப்பிரமணியபுரம் பஸ் ஸ்டாப்பில் டீ குடிக்க காரை நிறுத்தி விட்டு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கணவன், மனைவி இருவருமே உயிர்தப்பினர்.


Next Story