மேலும் 98 பேருக்கு கொரோனா


மேலும் 98 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jun 2021 12:43 AM IST (Updated: 23 Jun 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது. 
6 பேர் பலி 
மாவட்டத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 43,957 உயர்ந்துள்ளது. இதுவரை 42,675 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
 நேற்று மட்டும் 148 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 803 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்புக்கு மேலும் 6 பேர் பலியாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.
படுக்கைகள்
 சிகிச்சை மையங்களில 1,853 படுக்கைகள் உள்ள நிலையில் 119 படுக்கைகளில் நோய் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,734 படுக்கைகள் காலியாக உள்ளன.
 அரசு ஆஸ்பத்திரிகளில் 1528 படுக்கைகள் உள்ள நிலையில் 300 படுக்கைகளில் நோய் பாதிக்கப்படட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,228 படுக்கைகள் காலியாக உள்ளன. 
2.5 சதவீத பாதிப்பு 
விருதுநகர் சத்திர ரெட்டியப்பட்டி, சூலக்கரை, அல்லம்பட்டி, பாண்டியன் நகர், என்.ஜி.ஓ. காலனி, லட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 மேலும் நரிக்குடி, புலியூரான், சிங்காரத்தோப்பு, கோவிலாங்குளம், இலுப்பைக்குளம், ஒட்டன் குளம், மகாராஜபுரம், நத்தம்பட்டி, சாமிநத்தம், சிந்தபூளி, இளந்திரைகொண்டான், சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சொக்கநாதன்புதூர், மகாராஜபுரம், மணியம்பட்டி, வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருத்தங்கல், சாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மாவட்ட பட்டியலில் 61 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில பட்டியலில் 98 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் 2.5 ஆகும். 
1 More update

Next Story