எலி மருந்து தின்று பெண் தற்கொலை

வலங்கைமான் அருகே எலி மருந்து தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.
எலி மருந்து தின்று பெண் தற்கொலை
Published on

வலங்கைமான்:-

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள புங்கஞ்சேரி பகுதியை சேர்ந்த காமராஜ் மகள் சினேகா (வயது21). இவர் கும்பகோணத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் எலி மருந்து (விஷம்) தின்றார். இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சினேகா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com