கோவில்பட்டியில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி


கோவில்பட்டியில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி
x
தினத்தந்தி 23 Jun 2021 7:36 PM IST (Updated: 23 Jun 2021 7:36 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டது

கோவில்பட்டி:
கோவில்பட்டி நகரசபை கூட்ட அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு திருநங்கைகளுக்கு நிவாரண நிதியை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சமூக நல அதிகாரி தனலட்சுமி, உதவி கலெக்டர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, நகரசபை ஆணையாளர் ராஜாராம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து   மந்தித்தோப்பு பஞ்சாயத்து பகுதியில் உள்ள திருநங்கை கள் குடியிருப்பு பகுதிகளில் கலெக்டர் ஆய்வு நடத்தினார்.
1 More update

Next Story