மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மீண்டும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி

கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் வீடுகளை சுற்றிலும் மீண்டும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை மீண்டும் வீடுகளை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதி
Published on

கடலூர்,

விடிய விடிய மழை

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக மழை பெய்யாமல் ஓய்ந்திருந்ததால், வீடுகளை சூழ்ந்த மழைநீர் வடிந்தது.

இதற்கிடையே வடகிழக்கு பருவ காற்று நிலவுவதால், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. மேலும் நள்ளிரவு முதல் நேற்று காலை 7 மணி வரை விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதில் அவ்வப்போது கனமழையாகவும் பெய்தது.

குளம்போல் தேங்கியது

பின்னர் காலை 11 மணி வரை மழை பெய்யாமல் ஓய்ந்திருந்தது. இதற்கிடையே 11.30 மணி அளவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. இந்த மழை சுமார் மணி நேரம் நீடித்தது. அதன்பிறகு சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில், மதியம் 1.15 மணி அளவில் மீண்டும் கனமழை கொட்டியது. இந்த மழை மணி நேரம் வெளுத்து வாங்கியது.

இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் ஏற்கனவே வீடுகளை சுற்றிலும் தேங்கிய மழைநீர் வடிந்த இடங்களில், தற்போது மீண்டும் மழைநீர் தேங்க தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இதேபோல் சிதம்பரம், பண்ருட்டி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதில் மாவட்டத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 55 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக தொழுதூரில் 2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com