மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

ஆலங்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது 76). ஆலங்குளம் - தென்காசி நெடுஞ்சாலையில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். நேற்று அத்தியூத்தில் இருந்து சாலையின் மறுபுறம் உள்ள தனது இளநீர் கடைக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த குத்தாலிங்கம் மகன் பத்மநாதன் (21) என்பவர் எதிர்பாராதவிதமாக பெரியசாமி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும் ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com