2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை


2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 18 July 2021 6:39 PM GMT (Updated: 18 July 2021 6:39 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

அரியலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 19 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 36 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 188 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 332 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் 202 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 317 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. 2-வது நாளாக நேற்றும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று 594 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Next Story