விஷம் குடித்து வாலிபர் தற்கொலை


விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 July 2021 1:51 AM IST (Updated: 19 July 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் (வயது 32). இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவர் நேற்று முன்தினம் நெல்லை டக்கரம்மாள்புரம் சாலையோரம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் உயிருக்கு போராடியவாறு கிடந்தார்.
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சுபாஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story