விஷம் குடித்து பெண் தற்கொலை


விஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 20 July 2021 3:27 AM IST (Updated: 20 July 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

போத்தனூர்

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். டிரைவர். இவருடைய மனைவி ரத்தினம் (வயது 43). இவர்களுக்கு 20 வயதில் மகள் உள்ளார். 

இந்த நிலையில் ரத்தினம் தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தார். ஆனால் உரிய வரன் கிடைக்கவில்லை. மேலும் பொருளாதார ரீதியிலும் அவதிப்பட்டு வந்தனர். 

இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ரத்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story