கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்


கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்கக்கோரி தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 July 2021 7:23 PM GMT (Updated: 20 July 2021 7:23 PM GMT)

கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி தர்மபுரியில் தலையில் முக்காடு போட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:

கியாஸ் விலை உயர்வு
உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குழுவின் மாவட்ட அமைப்பாளர் கலாவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் நாகராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் தெய்வானை, ஈஸ்வரி, லில்லி புஷ்பம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
கியாஸ் சிலிண்டர் விலை கடந்த 7 மாதங்களில் ரூ.250 வரை அதிகரித்து உள்ளது. இந்த கடும் விலை உயர்வால் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் மீண்டும் விறகு அடுப்பை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
நிவாரண உதவி
கொரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழை குடும்பங்களுக்கு மாதம் தலா ரூ.7500 நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் தங்கள் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். இதேபோல் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்களில் சிலர் ஒப்பாரி வைத்தும் கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.

Next Story