மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி சாவு
Published on

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகில் உள்ள மகாஜனம்பாக்கம் கிராமம் குளக்கரை தெருவைச் சேர்ந்தவர் நாராயணன் (வயது 52), கட்டிட தொழிலாளி.

இவர் கடந்த 24-ந்தேதி மாமண்டூர் சந்தைமேடு பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி வீட்டின் மேலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டார்.

அதில் பலத்த காயம் அடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நாராயணன் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com