லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 21 July 2021 11:07 PM IST (Updated: 21 July 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி

வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் ஜூனைத் அகமது (வயது 30), ஆதில் (22). இவர்கள் இருவரும் பக்ரீத் பண்டிகைக்காக பெங்களூருவில் இருந்து பேரணாம்பட்டுக்கு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது வாணியம்பாடியை அடுத்த செட்டியப்பனூர் கூட்ரோடு அருகே வந்தபோது நின்றுகொண்டிருந்த லாரி மீது மோட்டார் மோதியதாக கூறப்படுகிறது. 

இதில் தூக்கி வீசப்பட்ட ஜூனைத் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த ஆதில் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறர்.
 
இந்த விபத்து குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story