சேலம் மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா தொற்று


சேலம் மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 21 July 2021 9:32 PM GMT (Updated: 21 July 2021 9:32 PM GMT)

சேலம் மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் புதிதாக 119 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 133 பேருக்கு தொற்று பாதிப்பு இருந்தது. நேற்று மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 17 பேர் பாதிப்பு அடைந்து உள்ளனர்.
அதேபோன்று கொங்கணாபுரத்தில் ஒருவர், மேச்சேரியில் 2 பேர், காடையாம்பட்டியில் 3 பேர், தாரமங்கலம், மகுடஞ்சாவடி, கொளத்தூரில் தலா 4 பேர், எடப்பாடியில் 5 பேர், வீரபாண்டி, ஓமலூரில் தலா 6 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 7 பேர், நங்கவள்ளியில் 11 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
பனமரத்துப்பட்டி
அதே போன்று கெங்கவல்லியில் ஒருவர், பனமரத்துப்பட்டியில் 2 பேர், வாழப்பாடி, தலைவாசல், அயோத்தியாப்பட்டணத்தில் 3 பேர், ஆத்தூரில் 6 பேர் பாதிப்படைந்து உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த 4 பேர், ஈரோட்டில் இருந்து வந்த 5 பேர், நாமக்கல்லில் இருந்து வந்து 8 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் நேற்று ஒரு நாளில் 119 பேர் பாதிப்படைந்து உள்ளனர். 
நேற்று ஒரு நாளில் சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்தனர். இதுவரை 92 ஆயிரத்து 397 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதில் 89 ஆயிரத்து 230 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தற்போது 1,653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story